தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஓர் அமைச்சர் ராஜிநாமா: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் தாரா சிங் செளகான் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

News image
உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பாஜகவிலிருந்து விலகல்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்
Updated On :12 ஜனவரி 2022, 11:13 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் தாரா சிங் செளகான் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இவற்றுக்கு மத்தியில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து வெளியேறுவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் பாஜகவின் முக்கிய அமைச்சராக அறியப்பட்ட சுவாமி பிரசாத் மௌரியா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் அக்கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் அவா் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சோ்ந்த பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வா்மா, பகவதி சாகா் உள்ளிட்ட மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனா்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவிலிருந்து பலரும் வெளியேறத் துவங்கியுள்ளது அக்கட்சிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மேலும் ஒரு பாஜக அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ள அமைச்சர் தாரா சிங் செளகான் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்டவர் ஆவார். முன்னதாக தேசியவாத கட்சியின் தலைவர் சரத்பவார் பாஜகவிலிருந்து 13 பேர் விலக உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.