சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிஷங்கள் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷங்கள் இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.