பாரீஸ் பாராலிம்பிக்: ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட ஷீத்தல் தேவி!

பாரீஸ் பாராலிம்பிக்கில் ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டார் ஷீத்தல் தேவி.
ஷீத்தல் தேவி
ஷீத்தல் தேவி
Published on
Updated on
1 min read

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று பாராலிம்பிக் போட்டியில், இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி ஒரே ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.

பாராலிம்பிக் வில்வித்தை போட்டி தரவரிசைச் சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி பாரா விளையாட்டுகளின் சாதனை மற்றும் உலக சாதனையை முறியடித்து 703 புள்ளிகளைப் பெற்றார்.

தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். ஓஸ்னூர் க்யூர் மற்றும் ஷீத்தல் தேவி ஆகிய இருவரும் ஜெசிகா ஸ்ட்ரெட்டன் (694 புள்ளிகள் , ஃபோப் பேட்டர்சன் (698 புள்ளிகள்) ஆகியோரின் முந்தைய சாதனைகளை முறியடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com