நியூயார்க்: அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற யுனைடெட் ஹெல்த்கேரின் சிஇஓ பிரையன் தாம்சன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சார்ந்த சர்வதேச நிறுவனம் யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் கிளை நிறுவனமான யுனைடெட் ஹெல்த் கேர் 4.90 கோடி அமெரிக்கர்கள் பயன்பெறும் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாகும்.
இதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பிரையன் தாம்சன் (வயது 50). இவர் புதன்கிழமை காலை 6.45 மணியளவில் மேன்ஹேட்டனிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக வந்தப் பொழுது, அவரை அந்த ஹோட்டலின் வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.
உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த மர்ம நபர் பிரையனை கொலைச் செய்ய திட்டமிட்டு அங்கு காத்திருந்ததும், பிரையன் அந்த ஹோட்டலுக்குள் நுழைய நடந்து சென்றப் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை பலமுறை சுட்டுவிட்டு தப்பியோடியதும் நியூயார்க் நகர போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க: வங்கதேச சிறைகளிலிருந்து தப்பிய 700 கைதிகள் தலைமறைவு!
கடந்த 2004 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இணைந்த பிரையன் தாம்சன், 2021ஆம் ஆண்டு முதல் யுனைடெட் ஹெல்த் கேரின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 50 வயதாகும் பிரையனுக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வரும் நியூயார்க் நகர போலீஸார், கொலையாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழஙப்படும் என்று அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமர் கோயிலுக்கு சிஇஓ தேர்வு: ஜூலை 18 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

விநாயகா மிஷன் கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிலிண்டா் வெடித்து பெண் உயிரிழப்பு: காப்பீடு, எரிவாயு நிறுவனம் ரூ.7.60 லட்சம் வழங்க உத்தரவு

தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



