நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மதுபோதையில் லாரி ஓட்டியதில் விபரீதம்! 3 பேர் பலி!

புணேவில் மதுபோதையில் ஒட்டப்பட்ட லாரி ஏறி சாலையோரமாக படுத்துறங்கிய 3பேர் பலியானதைப் பற்றி...

News image

மதுபோதையில் ஓட்டப்பட்ட லாரி ஏறி 3 பேர் பலி!

Updated On :23 டிசம்பர் 2024, 12:51 pm IST

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஓட்டுநரால் மதுபோதையில் ஒட்டப்பட்ட லாரி நடைபாதையின் மீது ஏறியதில் அதில் படுத்துறங்கிய 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும், 6 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

புணே மாவட்டம் வக்கோலியிலுள்ள கேசந்து பத்தா எனும் இடத்தில் இன்று (டிச.23) அதிகாலை சாலையோரமாக உள்ள ஒரு நடைபாதையின் மீது 12 பேர் உறங்கிக்கொண்டிருந்தனர்.

அதிகாலை சுமார் 1 மணியளவில் கஜானன் ஷங்கர் டோட்ரே (26) என்பவர் குடிபோதையில் டிப்பர் லாரியை வேகமாக ஒட்டி வந்துள்ளார், இதில் நிலைத் தடுமாறி அந்த லாரி நடைபாதையின் மீது ஏறியது.

அப்போது அதில் உறங்கிக்கொண்டிருந்த 9 பேரின் உடல்கள் நசுங்கியதில், வைபவி ரித்தேஷ் பவார் (வயது-1), வைபவ் ரித்தேஷ் பவார் (2) ஆகிய இரண்டு குழந்தைகளும் விஷால் வினோத் பவார் (22) இளைஞரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு ஸஸ்ஸூன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களில் 3 பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில், நடைபாதையில் உறங்கிய மேலும் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாநில காவல்துரையினர் மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.