கள்ளச்சாராய மரணம்: மேலும் ஒருவர் கைது

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மேலும் ஒரு கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் கைது செய்துளளனர்.
கள்ளச்சாராய மரணம்: மேலும் ஒருவர் கைது
Published on
Updated on
1 min read

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மேலும் ஒரு கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் கைது செய்துளளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 34 பேர் இறந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

கள்ளச்சாராய மரணம்: மேலும் ஒருவர் கைது
கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் 34-ஆக அதிகரிப்பு!

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com