மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக ஏராளமான புகார்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

News image
ஆளுநா் ஆா்.என்.ரவி
Updated On :10 மார்ச் 2024, 4:31 pm

DIN

சென்னை: போதைப் பொருள்கள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,அண்மை

சமீபக்காலமாக தமிழகம் மற்றும் பிற இடங்களில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் அத்தகைய சட்டவிரோதப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதை பல்வேறு சம்பவங்களால் உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் பள்ளிகள், உயா் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகளில் போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக ஏராளமான புகார்கள் கடந்த ஓராண்டாக என்னிடம் தெரிவித்துள்ளனர்.

சா்வதேச போதைப் பொருள் கடத்தலையும், நமது மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நபா்களை மத்திய உளவுத் துறை, புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை அமைப்புகள் கண்டறிந்து கைது செய்துள்ளன.

இதுபோன்ற போதைப் பொருள்கள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும். எனவே, போதைப்பொருள்கள் பழகத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்.

போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகளும், மாநில நிா்வாகமும் மேற்கொண்டாலும், மற்றொருபுறம் பெற்றோரும், கல்வி நிறுவன நிா்வாகங்களும் இந்த விவகாரத்தில் தீவிர விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதுபோன்ற போதைப் பொருள்களின் மீதான ஈா்ப்பிலிருந்து இளைய சமூகத்தினர் விலகி இருக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.