6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

1,400 கிலோ எடையில் பிரமாண்ட கோயில் மணி: நாமக்கல்லில் தயார் செய்த கலைஞர்கள்!

நாமக்கலில் 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணியை கலைஞர்கள் தயார் செய்துள்ளனர்.

News image
நாமக்கல்லில் தயாரிக்கப்பட்ட 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணி.
Updated On :24 மார்ச் 2024, 10:16 am

DIN

நாமக்கல்: நாமக்கலில் 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணியை கலைஞர்கள் தயார் செய்துள்ளனர்.

நாமக்கல் முல்லைநகரில், ஆண்டாள் மெட்டல் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் கோயில்களுக்கான மணிகளை தயார் செய்வதில் கை தேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஆர். ராஜேந்திரன், ஆர். காளிதாஸ் ஆகியோர் 25 பேர் கொண்ட தங்கள் குழுவினருடன் இணைந்து, கடந்த டிசம்பர் மாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு 10 பெரிய ஆலய மணிகளையும், 36 கைப்பிடி மணிகளையும் தயார் செய்து குடமுழுக்கு விழா நாளன்று அங்கு அவற்றை ஒலிக்கச் செய்தனர்.

இந்த நிலையில், சேலம் அரியானூர் பகுதியில் உள்ள 1008 சிவலிங்கம் கோயிலுக்கு பிரம்மாண்ட மணி ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பாக அங்குள்ள பிரபல தனியார் கல்லூரி நிர்வாகம் ஆர்டர் கொடுத்தது. ரூ.45 லட்சம் செலவில், 1,400 கிலோ எடையில் 80 சதவீத காப்பர், 20 சதவீத வெள்ளியம் ஆகியவற்றை கொண்டு, 20 கலைஞர்கள் ஒருங்கிணைந்து இந்த மணி தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 5 அடி உயரம், 4.50 அடி விட்டம் கொண்ட கோயில் மணியை தயாரித்து முடிக்தனர். மேலும், 30 கிலோ எடை கொண்ட மணி ஒலிக்க பயன்படுத்தப்படும் உருளை வடிவிலான கம்பி ஒன்றும் தயாரிக்கப்பட்டது. இந்த கோயில் மணி முழுவதும் சிவன், பெருமாள், நந்தி, வலம்புரி சங்கு ஆகியவற்றின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கோயில் மணி ஞாயிற்றுக்கிழமை மாலை கிரேன் மூலம் தூக்கப்பட்டு லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன.

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தின் போது ஒலிக்கும் வகையில் பிரமாண்ட மணியை தயாரித்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், யாராவது ஆர்டர் கொடுக்க முன் வந்தால் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன் என கோயில் மணி தயாரிப்பில் ஈடுபட்ட தந்தை, மகனான ராஜேந்திரன், காளிதாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.