காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

தேர்தல் பிரசார விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது

News image
திருமாவளவன்(கோப்புப்படம்)
Updated On :5 மே 2024, 2:00 pm

DIN

அரியலூர்: தேர்தல் பிரசார விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என விசிக தலைவரும் சிதம்பரம் வேட்பாளருமான திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று விடும் என்கிற அச்சத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.

தொடக்கத்தில் இருந்தே தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அணுமுறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக இருக்கிறது.

தேர்தல் பிரசார விவகாரங்களில் யார் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்ப வேண்டும்.

தோ்தல் பிரசாரத்தில் மோடி பேசிய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய தோ்தல் ஆணையம், மாறாக

அப்படி தோ்தல் பிரசாரத்தில் மோடி பேசிய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், மாறாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை.

பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது.

தோ்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சாா்பாக, ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக தோன்றுகிறது என திருமாவளவன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.