6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலி!

மின்விளக்கு கம்பம் நடும்போது நடந்த சோக சம்பவம்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 12:27 pm

DIN

மின்சாரம் பாய்ந்து ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலியாகினர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்பம் நடுவதற்காக, வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டர் ஆக பணிபுரியும் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) மற்றும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (55) இருவரும் மின்விளக்கு கம்பத்தை நடுவதற்காக கம்பத்தை தூக்கி நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், மின் கம்பியின் மின்விளக்கு கம்பம் மோதி, c மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பம்ப் ஆப்ரேட்டர் முத்துக்குமரன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வரும் முத்துக்குமரனுக்கு, உதவி செய்ய அசோக் குமார் உடன் வந்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.