ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலி!

மின்விளக்கு கம்பம் நடும்போது நடந்த சோக சம்பவம்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 5:57 pm IST

மின்சாரம் பாய்ந்து ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலியாகினர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்பம் நடுவதற்காக, வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டர் ஆக பணிபுரியும் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) மற்றும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (55) இருவரும் மின்விளக்கு கம்பத்தை நடுவதற்காக கம்பத்தை தூக்கி நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், மின் கம்பியின் மின்விளக்கு கம்பம் மோதி, c மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பம்ப் ஆப்ரேட்டர் முத்துக்குமரன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வரும் முத்துக்குமரனுக்கு, உதவி செய்ய அசோக் குமார் உடன் வந்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.