பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர்லும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின், டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் பாபர் அசாம். ஆனால், அதிலும் பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாத நிலையில், மீண்டுமொருமுறை பாபர் அசாமின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. தற்போது டெஸ்ட்டில் கேப்டனாக ஷான் மசூத் கேப்டனாக இருக்கிறார்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக பாபர் அசாம் பதவி விலகியதைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம் 2020 ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்படும் முன்பு 2019 ஆம் ஆண்டு டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் 7 ஆம் தேதி இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் பாபர் அசாம் பதவி விலகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து பாபர் அசாம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நான் உங்களுக்குச் செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த மாதம் கூறியபடியே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். அணியை வழிநடத்துவது பெருமையானது தான். ஆனால், நான் என் பொறுப்பில் ஒரு வீரராக இருக்க விரும்புகிறேன்.
கேப்டனாக இருப்பது பயனளிக்கக் கூடியது என்றாலும், அது எனக்கு பணிச்சுமையாக இருக்கிறது. உங்களது ஆதரவுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் என்று நன்றியுள்ளவனாக இருப்பேன். ஒரு வீரராக அணிக்காக எனது பங்களிப்பை அளிப்பேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி வருகிற நவம்பரில் மூன்று டி20 மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் விளையாடவிருக்கிறது.
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20, 2 டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பாகிஸ்தான் அணி மீண்டும் மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து தொடருக்காக தாயகம் திரும்புகிறது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


