பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு ரன்கள் 222 இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:38 pm IST

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி தில்லியில் நடைபெற்று வருகிறது.

டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.

இந்தியா பேட்டிங்

அதன்படி இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார்.

முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். அவருடன் வந்த அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

நிதீஷ் குமார் மிரட்டல்

கடந்த போட்டியில் அறிமுக வீரரான நிதீஷ் குமாரும், ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியில் மிரட்டினர்.இவர்களின் அதிரடியால் 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தது.

தனது இரண்டாவது போட்டியிலேயே 27 பந்துகளில் அரைசதம் விளாசினார் நிதீஷ் குமார் ரெட்டி. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதீஷ் குமார் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் பெவிலியன் திரும்பினார்.

அவருக்குப் பின்னர் வந்த ஹார்திக் பாண்டியாவும் அதிரடியில் மிரட்டினார். தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்த ரிங்கு சிங் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ரியான் பராக் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் கோல்டன் டக் அவுட்டாக, வரு சக்ரவர்த்தியும் டக் அவுட்டானார். அர்ஷ்தீப் சிங் ஒரு சிக்ஸருடன் 6 ரன்னில் வெளியேறினார்.

வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, தன்சீம் அசன், முஸ்தபிசுர் ரகுமான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்

வங்கதேசத்துக்கு ரன்கள் இலக்கு

இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.