மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

லாரி சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி.

News image

சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர். - Din

Updated On :17 செப்டம்பர் 2024, 7:18 am

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்றுக்கொண்டிருந்த நிலையில், டேங்கர் லாரியை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சாலை விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில், வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், லாரி இருசக்கர வானத்தின் பின்புறத்தில் மோதியதால் 4 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியாகினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.