சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அய்யர்மலையில் மீண்டும் தொடங்கியது ரோப் கார் சேவை!

குளித்தலை அருகே அய்யா்மலையில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image

குளித்தலை அய்யர்மலை - Din

Updated On :24 செப்டம்பர் 2024, 4:02 am

குளித்தலை அருகே அய்யா்மலையில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பில் கம்பிவட ஊா்தி சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னதாக தொடக்கிவைத்து இருந்தார்.

இதையடுத்து பக்தா்களின் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிதுகாலம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்றுமுதல் (செப். 24) வழக்கம்போல் அய்யா்மலையில் ரோப் கார் சேவை செயல்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.