ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைப் பற்றி...

News image

அம்பேத்கர் சிலை

(கோப்புப் படம்)

Updated On :16 ஏப்ரல் 2025, 2:39 pm

DIN

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள பூங்காவில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் ஜெயந்தி நாளான கடந்த ஏப்.14 ஆம் தேதியன்று அந்தப் பூங்காவிலிருந்த அம்பேத்கர் சிலையானது உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நாங்தலா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த பரேஷ் (எ) ரிக்கு மற்றும் ஹிஸாரின் பர்கி கெடி பகுதியைச் சேர்ந்த ராகுல் (எ) சிக்கு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.