கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், தீயணைப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் அந்த அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனைகளின் முடிவில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த மிரட்டல் போலியானது என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அம்மாநில சைபர் கிரைம் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் எனக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மிரட்டல் குறித்து வெளியான தகவலில் அந்த அலுவலகத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு நிறுவப்பட்டுள்ளதாகவும் அது சரியாக மதியம் 1.30 மணிக்கு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அந்த மிரட்டல் மின்னஞ்சலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அழிக்கும் முயற்சி நிகழ்த்தப்படும் அதே நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாதம் கேரளத்தின் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி அஞ்சலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



