தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

நாங்கள் ஒரு ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

News image

ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

Updated On :9 பிப்ரவரி 2025, 1:23 pm

DIN

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார், மேலும் நாங்கள் ஒரு ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறினார்.

பிரியங்கா கக்கா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடான சந்திப்பில் கூறுகையில்,

"கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.மக்களின் தீா்ப்பை நாங்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் என்று நம்புகிறோம். தில்லியில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும். ஆம் ஆத்மி கட்சி தனது தவறுகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, செயல்படும் ஒரு கட்சியாகும். வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம். தனது தவறுகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, செயல்படும் ஒரு கட்சி ஆம் ஆத்மி. வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம்" என்று கக்கர் கூறினார்.

மேலும் தில்லி மக்களுக்காக கட்சி பாடுபடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தில்லி மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் பொறுப்பேற்கச் செய்வோம் என்றாா்.

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. அதே நேரத்தில்,ஆம் ஆத்மி கட்சி முந்தைய எண்ணிக்கையான 62 இல் இருந்து 22 இடங்களே பெற்றது. தேசிய தலைநகரில் தனது மறுமலர்ச்சியை எதிர்பார்த்த காங்கிரஸ், மீண்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

கடினமான போட்டிக்குப் பிறகு கல்காஜி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட அதிஷி, பாஜகவின் ரமேஷ் பிதூரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட அதன் பல உயர்மட்டத் தலைவர்கள் தங்கள் தொகுதிகளை இழந்துள்ள நிலையில், அதிஷியின் வெற்றி ஆம் ஆத்மிக்கு ஒரு சிறப்பு அம்சமாகும்.

சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக், அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.