தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :12 பிப்ரவரி 2025, 6:33 pm IST

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. 41 நாள்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.

அப்போது, சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது.

பின்னா், மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மாலையில் நடைபெற்றது.

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜன. 20-ல் அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமாா் நம்பூதிரி, திறக்கப்பட்டது.

இன்று வேறு பூஜைகள் நடைபெறாது எனவும் நாளை(பிப். 13) அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, கணபதி ஹேமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும், இரவில் படி பூஜையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள்கள் அதாவது பிப். 17 ஆம் தேதி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.