இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பு.

News image
Updated On :22 பிப்ரவரி 2025, 4:01 am

DIN

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் என்பவரை நியமித்தார்.

காஷ் படேல் வலிமையானவர் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் காஷ் படேல் அதிகாரப்பூர்வமாக எஃப்.பி.ஐ. இயக்குநராக இன்று(பிப். 21) பதவியேற்றுக்கொண்டார். அவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.

Story image

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். காஷ் படேல் 10 ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

எஃப்.பி.ஐ. மேலும் வெளிப்படையாக இருக்க முயற்சிப்பேன் என்றும் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் மீது எஃப்.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும் என்றும் காஷ் படேல் கூறியுள்ளார்

கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றது காஷ் படேல் மட்டுமல்ல. முன்னதாக இந்திய வம்சாவளி சுகாஷ் சுப்பிரமண்யமும் கீதையை வைத்து பதவியேற்றுள்ளார். சுகாஷ், இந்த முறை தேர்தலில் விர்ஜினியாவில் ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

யார் இந்த காஷ் படேல்?

காஷ் படேலின் பெற்றோர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர் நியூயார்க், கார்டன் சிட்டியில் 1980ல் பிறந்தார். ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்பும் பேஸ் சட்டப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய அவர் அமெரிக்க அரசில் பல உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.