மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

எதிர்நீச்சல் மதுமிதாவின் அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி!

கவனம் ஈர்க்கும் அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி.

News image

அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி!

Updated On :3 ஜனவரி 2025, 5:36 pm IST

எதிர்நீச்சல் தொடரில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா நடிக்கும் அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்நீச்சல் 2 ஆம் பாகத்தின் தான் நடிக்கவில்லை என்று அவரே பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவு ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகை மதுமிதா அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.

மேலும், இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் அரவிந்தின் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி(மதுமிதா), கூட்டு குடும்பத்தில் அவர் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக இருக்கும் என முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.

அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இத்தொடரின் ஒளிபரப்பு தேதி, ஓளிபரப்பு நேரம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.