ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது!

ஜம்முவில் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Dinamani

Updated On :8 ஜனவரி 2025, 10:53 am

DIN

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்மாநிலத்தின் பர்த்தானா சந்திப்பில் காவல் துறையினர் வழக்கமான சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தப்போது ஓட்டுநரின் இருக்கைக்கு கீழ் 6 கிலோ அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்தில் வந்த குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த அனஸ் அஜாஸ் அவான் மற்றும் சஹித் அஹமது ஷேக் ஆகிய 2 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து மேலும் 2 கிலோ அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டம் பிரிவு 8/21 மற்றும் 29 கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த போதைப் பொருள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.