தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி பலி!

உத்தரப் பிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜனவரி 2025, 0:05 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் 8 வயது சிறுமி பலியானார்.

அம்மாவாட்டத்தின் கட்டார்னியாகாட் வனப்பகுதியின் அருகிலுள்ள தமோலின்புர்வா எனும் கிராமத்தைச் சேர்நத சாலினி (வயது8) எனும் சிறுமி அவரது பெற்றோருடன் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுமியை தாக்கி இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த கிராமத்துவாசிகள் தங்களது கையிலிருந்த ஆயுதங்களை வைத்து சிறுத்தையை விரட்டியுள்ளனர். இருப்பினும், அந்த சிறுத்தை கடித்து தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் அறிந்து, அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுமியின் உடலை கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்து கண்கானித்து வருகின்றனர்.

மேலும், வனத்துறையினர் சார்பில் அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10,000 உதவிப்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், வயலில் வேலை செய்யும் மக்கள் கூட்டமாகவும் தற்காப்புடனும் வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 1 ஆண்டு காலத்திற்குள் கட்டார்னியாகாட் வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தம் 7 முறை சிறுத்தை தாக்குதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.