நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் இன்றுடன்(ஜன. 17) நிறைவடைகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிவரும் தொடர் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தத் தொடரில் நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நாயகனாக நடித்த ஜெய் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நடித்த நீதானே என் பொன்வசந்தம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.
இதேபோன்று பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ரேஷ்மா முரளிதரன்.
இதையும் படிக்க: லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியீட்டுத் தேதி!
இருவருக்கும் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் ஆரம்பம் முதலே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இருந்தாலும், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் டிஆர்பியில் சற்று பின் தங்கியுள்ளதால் இத்தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களேஆன நிலையில், இத்தொடர் நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்த கிழக்கு வாசல் தொடர் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்த நிலையில், நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலும் 6 மாதத்திலேயே நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தம்

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



