இந்துத்துவ சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'பரந்தூர், ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. நான் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். மக்களிடம் பேசியிருக்கிறேன்.
மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறேன். மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவ சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும் அவரது கொள்கை, கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது' என்று கூறினார்.
இதையும் படிக்க | டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை தவெக தலைவர் விஜய், வருகிற 20 ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார்.
அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்டக் களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது?

ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



