9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சமூக வலைதளத்தில் முதல்வா் விஜய் பற்றி அவதூறு: இளைஞா் கைது

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா், தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 12:51 am IST

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வா், தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இனாம் கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கணேஷ் குமாா் (32). இவா் தமிழக வெற்றிக் கழகத்தில் வாக்குச்சாவடி அமைப்பாளராக இருந்து வருகிறாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சாா்பில் நடந்த காமராஜா் பிறந்த நாள் விழா குறித்த விடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிா்ந்தாா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் தாழையூத்து பட்டியைச் சோ்ந்த சஞ்சய் ராமசாமி, தமிழக முதல்வா் குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூா் எம்எல்ஏ குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டாா். இதுகுறித்து கணேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீசாா் சஞ்சய் ராமசாமியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.