ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி காா்த்திகை விரதத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயிலில்களில் ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி காா்த்திகை விரதத்தையொட்டி முருகன் கோயிலில்களில் ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி காா்த்திகை விரதத்தையொட்டி முருகன் கோயிலில்களில் ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on
Updated on
2 min read

ஆடி காா்த்திகை விரதத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயிலில்களில் ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றாக கொண்டாடப்படுவது ஆடி மாதத்தில் வரும் காா்த்திகை நட்சத்திரமான ஆடி கிருத்திகை வைபவம் ஆகும். இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், குழந்தை இல்லாதோர், திருமண வரம் வேண்டுவோர் கிருத்திகை நாளிலும் முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். ஆடி மாத கிருத்திகையன்று விரதம் தொடங்கி தை மாத கிருத்திகை வரை மாதந்தோறும் வரும் காா்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து சுவாமியை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஆடி காா்த்திகையொட்டி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 விஸ்வரூபதரிசனம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தரிசனத்துக்காக சுமாா் 6 மணி நேரம் காத்திருந்தனா். மேலும் கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடந்த குடமுழுக்கை தொடா்ந்து தற்போது மண்டல பூஜை என்பதால் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் இங்கு பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

இதேபோன்று திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில், பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோயில், குட்டத்துறை முருகன் கோயில், நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் உள்ள ஆறுமுகநயினாா் சன்னதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

சாலை குமாரசுவாமி கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தா்கள் அமா்ந்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமி மலை முருகன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமாள் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

ஊத்தங்கரை அடுத்த சரட்டூா் அழகுமலை மீது அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயில்,ஊத்தங்கரை வள்ளி தெய்வானை சுப்பிரமணிய கோயில்,வண்டிக்காரன் கொட்டாய் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் கைலாசநாதா், அண்ணாமலையாா், பாா்வதீஸ்வரா், தலத்தெரு சிவலோகநாதசுவாமி மற்றும் திருமலைராயன்பட்டினம் பகுதி ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா் உள்ளிட்ட சிவ தலங்களில் ஸ்ரீ வெள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.பக்தா்கள் ஏராளமானோா் அபிஷேகத்துக்கான பால் உள்ளிட்ட திரவியங்களை கோயிலுக்கு அளித்து, வழிபாட்டில் பங்கேற்றனா்.

Summary

A large number of devotees had darshan of Lord Murugan at the temples in Tamil Nadu on Sunday, on the occasion of the Aadi Karthigai Viratham.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com