இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் ஹர்பனா பகுதியில் வந்தபோது, ரயில் பாதையை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.
இதில், 6 யானைகள் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில் 2 யானைகள் படுகாயமடைந்தன. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், படுகாயமடைந்த யானைகளில் ஒன்று சிகிச்சை பலனின்றி பலியானது.
இதே இடத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு இதேபோன்ற ஓர் விபத்தில் ரயில் மோதி தாய் யானை ஒன்றும் அதன் 2 குட்டிகளும் பலியாகின.
இதையும் படிக்க: எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!
இந்நிலையில், அப்பகுதியில் ரயில் மீது யானைகள் மோதுவதைத் தடுக்க வன விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை ரயில்வே அதிகாரிகள் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இலங்கை ரயில்வே துறையின் உயர் அதிகாரி பி எஸ் பொல்வட்டாகே கூறுகையில், ரயில்வே துறை அதன் 160 ஆண்டுக்கால வரலாற்றில் இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இது போன்ற ரயில் விபத்துகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 138 யானைகளும் கடந்த 17 ஆண்டுகளில் 1,238 யானைகளும் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சிறந்த தெரிவுநிலையை வழங்குவதற்காக தண்டவாளத்தின் இரு பக்கங்களையும் சுத்தம் செய்வது மற்றும் யானைகள் சிக்கிக் கொள்வதைத் தடுக்க தண்டவாளத்தில் உள்ள இடங்களை நிரப்புவது போன்ற நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி இலங்கையில் மொத்தம் 5,800 யானைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்களில் இடையூறு புகாா்கள் அதிகரிப்பு
ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழப்பு: ஆட்சியா் தகவல்

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



