காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 107 பள்ளிகளைச் சோ்ந்த 93.27 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொது தேர்வை 107 அரசு, தனியாா் பள்ளிகளைச் சேர்ந்த 6532 மாணவர்கள், 7,222 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 754 தேர்வு எழுதினர்.
இவா்களில் 5,958 மாணவா்கள், 6,870 மாணவிகள் என மொத்தம் 12,828 போ் (93.27 சதவிகிதம்) தோ்ச்சி பெற்றனா். 951 போ் தோ்ச்சி பெறவில்லை. மாணவா்களில் 91.21 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 95.13 சதவிகிதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.
இதில் அரசுப் பள்ளிகளில் 89.71 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 23 தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தில் நிகழாண்டில் மாநில அளவில் 32-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 31 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை 30-இல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

யோகாசனப் போட்டி: எம்.கே.ஜே.சி. மாணவிகள் சாதனை

தினமணி செய்தி எதிரொலி: உயா்கல்வியில் சோ்ந்த மலைக்கிராம மாணவா்கள்

உலக சாக்லேட் தின போட்டி: ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரி வெற்றி
விடியோக்கள்



