மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

சருமம் பொலிவாக...சாப்பிட வேண்டிய உணவுகள்!

முதிர் வயதிலும் இளமைத் தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் பொதுவானதுதான்.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:14 pm IST

முதிர் வயதிலும் இளமைத் தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் பொதுவானதுதான். அந்தவகையில், உடல்நலத்தைவிட சரும அழகுக்காக மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். 

கோடை வெயில், சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் சரும அழகு கெடுகிறது. எனினும், காரணங்களை அறிந்து தீர்வு காணாமல் செயற்கையான ரசாயனங்கள் நிறைந்த அழகு சாதனப் பொருள்களையே பெரும்பாலான ஆண்களும் பெண்களும் நாடுகின்றனர். 

உடல்நலமும் சரும அழகும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் பலரும் அறிவதில்லை. உடல்நலத்தைக் காக்கும் அதேநேரத்தில் சருமத்திற்கு அழகு சேர்க்கும் சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டாலே போதுமானது. 

பொதுவாக துரித(பாஸ்ட் புட்), பொருந்தா(ஜங்க் புட்) உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும். 

அனைத்துவகை காய்கறி, பழங்களை சாப்பிடலாம். 

எனினும் சரும அழகுக்கு குறிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

இளநீர் 

ஆரஞ்சு, நெல்லிக்காய் 

பப்பாளி

திராட்சை

பூண்டு

கீரை வகைகள் 

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை

கேரட், பீட்ரூட் 

தக்காளி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு 

மீன் 

தயிர் அல்லது மோர் 

இதுதவிர தினமும் சிறிய சிறிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.