சிலருக்கு கடையில் விற்பனையாகிற ப்ரூ, லியோ, நரசுஸ், உள்ளிட்ட காப்பித்தூள்களில் ஒன்றை வாங்கி ஃபில்டர் காஃபி தயாரிப்பதே திருப்தியாக இருக்கும். சிலருக்கோ, தாங்களே நேரடியாக சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்று தரமான காப்பிக் கொட்டைகளும், பீபரியும் வாங்கி தங்கள் கை பட மெஷினில் அரைத்து அதில் பதமாகச் சிக்கரி கலந்து நாசி மணக்க, மணக்க திடமான காப்பித் தூளை தாங்களே தயாரித்து அதில் காஃபி போட்டு அருந்தினால் தான் திருப்தியாக உணர முடியும். இதெல்லாம் அவரவர் மனநிலை சார்ந்த விஷயங்கள் என்றாலும் யோசித்துப் பார்க்கையில் இது கூட சற்று சுவாரஸ்யம் தரக் கூடிய விஷயம் தான் இல்லையா? சரி இப்போது தரமான, திடமான ஃபில்டர் காப்பித் தூள் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்;