சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஓ மை காட்! நாங்க தப்பிச்சிட்டோம்: எஸ்கலேட்டரில் இருந்து தப்பிய தந்தை, மகனின் திகைப்பு!

அவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது.

Updated On :7 பிப்ரவரி 2024, 3:35 pm IST
Story image

ஷாப்பிங் மால் ஒன்றில் தனது சின்னஞ்சிறு மகனுடன் எஸ்கலேட்டரில் ஏறிக் கடக்கிறார் ஒரு தந்தை.  அவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது. அச்சத்தில் உறையும் அந்அவர்கள் தத் தந்தையும் மகனும் ஓ மை காட் நாங்க தப்பிச்சிட்டோம் என்று அந்த இடத்தில் இருந்து விரைகிறார்கள். பிறகு நொறுங்கிச் சிதறிய எஸ்கலேட்டரை மாலின் பணியாளர்கள் வந்து பார்வையிடுகிறார்கள். இப்படியொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக் கண்டு கருத்து தெரிவிப்பவர்கள், ‘நீங்கள் ஏன் படிகளைப் பயன்படுத்தக் கூடாது?’ என்றும், நல்ல வேளை மிக அருகில் நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தில் இருந்து தப்பிய தந்தைக்கும், மகனுக்கும் வாழ்த்துக்கள், என்றும் ஜஸ்ட் மிஸ்டு’ என்றும் கருத்துரையிட்டு தங்களது வியப்பையும் அதிர்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தியாவில் எஸ்கலேட்டர்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்த பின்பும் இப்போதும் அவற்றைப் பயன்படுத்த அச்சம் கொண்டு படிகளையும் லிஃப்டுகளையும் பயன்படுத்துவோர் அதிகம்பேர். இப்படி எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்த அச்சப்படுபவர்களுக்கு எஸ்கலோபோபியா இருப்பதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். எஸ்கலோபோபியா என்றால் எஸ்கலேட்டர்களில் ஏற அச்சப்படுபவர்கள் என்று பொருளாம். இந்த ஃபோபியாவில் இருந்து விடுபட சிகிச்சையெல்லாம் கூற இருக்கிறது என்கிறார்கள். ஆனால், மேலே வீடியோவில் நிகழ்ந்த எஸ்கலேட்டர் விபத்தைப் பார்த்தால் எஸ்கலோபோபியா இருந்தாலும் தேவலாம்... பேசாமல் படிகளில் ஏறியே மாடிகளைக் கடக்கலாம் போலத்தான் இருக்கிறது இல்லையா?

மேற்கண்ட எஸ்கலேட்டர் விபத்து நிகழ்ந்திருப்பது இந்தியாவில் இல்லை. அது நடந்தது சீனாவின் தெற்கு மாகாணமொன்றில்... அங்கே இம்மாதிரியான எஸ்கலேட்டர் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன போலும்! யூடியூபில் அப்படியான விபத்து வீடியோக்கள் நிறைய காணக் கிடைக்கின்றன. பார்க்கவே பயங்கர பீதியாக இருக்கிறது.  

Related Article

ஏன் இந்தியச் சூழலில் சப்தம் இவ்வளவு பெரிய சக்தியாக செயல்பட்டு வருகிறது?

செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

கடல் நீரில் மறைந்திருக்கும் கல், என்ன கல்? இந்த விடுகதைக்கு விடை என்ன?

தகிட தகதிமி: மிஸ்ர நடையில் அமைத்துள்ள சினிமா பாடல்கள் இவை

மருமகள்களை ஜெயித்த மாமியாரின் தந்திரம்! சீனச் சிறுகதை!

கலைஞர், எம்ஜிஆர் நட்பின் சுவாரஸ்யத் துளிகள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.