கோடை கடுமையாகத் தன் வேலையைக் காட்டத் தொடங்கி வாரங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாத இறுதி வரையிலும் சமயங்களில் சீதோஷ்ண நிலை சதி செய்தால் செப்டம்பர் வரையிலும் கூட நமக்கு கோடை தான். அருங்கோடையில் கூட ஃப்ரிஜ்ஜில் நீரைக் குளிர வைத்துக் குடிப்பது பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. கடும் சளித்தொல்லை, ஆஸ்துமா போன்ற அவஸ்தைகளுடன் ஜில்லென்று குடிநீர் அருந்தி தாகத்தை தணித்துக் கொள்ளக்கூட முடியாமல் பலர் சிரமப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஃப்ரிஜ்ஜில் தண்ணீர் வைத்துக் குடித்தால் உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் மண்பானைத் தண்ணீரை முயற்சி செய்யலாம். மண்பானைத் தண்ணீர் கூடத்தான் சளி, ஆஸ்துமாக்காரர்களுக்கு எதிரி என்று சொல்வீர்களானால் அதற்கு சில மாற்று வழிகள் உண்டு. மண்பானைத் தண்ணீரே ஆரோக்யமானது தான் என்றாலும் அதன் குளிர்ச்சியால் சளி பிடிக்காமலிருக்க என்னென்ன மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் அபாயத்தைத் தவிர்க்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.