ஒருநாள் அவ்வாறு வசூலித்த பணத்துடன் மாட்டு வண்டியில் பழையனூர் அருகே வரும் போது, அந்தி சாயும் நேரத்தில் திடீரென கொள்ளையர்கள் சூழ்ந்து கொள்ள, என்ன செய்வதென்று அறியா நிலையில், ஏதோ ஒரு தெய்வ சக்தியால் 'கருப்பையா... காப்பாற்று’ என கூவத் தோன்றியதாம். அப்படி கூவி அழைத்தவுடன் கையில் அரிவாளுடன் [ கருப்பையா கையில் எப்போதும் அரிவாள் உண்டு] எங்கிருந்து வந்தார் என அறிய இயலாமல் ஒருவர் ஆஜானுபாகுவாய் வந்து தனி ஒருவனாய் கொள்ளையர்களை விரட்டி அடித்து விட்டு, திரு ராமசாமி ஐயரிடம் சிறிது விபூதியை கொடுத்து விட்டு 'இனி பயம் இல்லை போ' எனக் கூறிவிட்டு மறைந்து விட்டாராம்.