தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் டாஸ்மாக் கடைகளே பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை மாதிரியான கொடூரங்களுக்கு அடிப்படை. மதுபோதை மற்றும் இதர போதை வஸ்துக்களின் பெருக்கமே பெண்களை விபரீதமாக அணுகும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கிறது. மதுக்கடைகளைத் தவிர்த்தாலே போதும் இம்மாதிரியான குற்றங்களைப் பெருமளவில் தவிர்த்து விடலாம் - என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி ஐபிஎஸ். பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றிய அவருடைய கருத்துச் சீற்றத்தைக் காணொலியாகக் காண...
அதோடு பாலியல் வன்முறை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களைத்தான் இந்த சமூகம் காலங்காலமாக விமர்சித்து குற்றவாளிகளாகக் கூனிக் குறுகச் செய்து கொண்டிருக்கிறது. எப்போதுமே குற்றம் செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் யாரும் இதை பாலியல் இச்சைக்காக செய்யவில்லை. நண்பன் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு திட்டமிட்டு தனித்து வரச் சொல்லி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்தப் பெண்களை வக்கிரமான கேள்விகள் கேட்டு மேலும் கூனிக்குறுக வைப்பதை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதையே முக்கியமாகக் கருத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றமில்லை என நான் நம்புகிறேன். இதை அவர்களது குடும்பமும், நம் சமூகமும் நம்பவேண்டும்.
- என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், எழுத்தாளரும், பதிப்பாளருமான திலகவதி ஐபிஎஸ்.
இன்று சர்வதேச மகளிர் தினம்... அடடா அந்த வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழக் கூடைக்காரிகளை மறந்து போனோமே?!
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா? சபாஷ் சரியான தண்டனை!
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... இது நெறிமீறல்! (விடியோ)
‘தி கிரேட் காளி’ யைக் கேலி செய்கிறதா இந்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்!