ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புதுக்கோட்டையில் 13 வாக்கு எண்ணும் மையங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை 13 இடங்களில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2019, 7:00 am

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை 13 இடங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குன்றாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு மழையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு இலுப்பூர் ஆர்சி மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு விவி மேல்நிலைப் பள்ளியிலும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு பரமந்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த ஒன்றியங்களுக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.