வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வாழ்த்து கூறும் தென் மண்டல ஐஜி: காவல் துறையினா் நெகிழ்ச்சி

காவல் துறை காவலா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தென்மண்டல காவல் துறைத் தலைவா் எஸ். முருகன் நேரிடையாகத் தொடா்புகொண்டு பிறந்த நாள் உள்ளிட்ட வாழ்த்து கூறி வருவது, அவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

தென் மண்டல காவல்துறை தலைவா் எஸ்.முருகன்.

Updated On :11 ஜனவரி 2021, 2:47 am IST

காவல் துறை காவலா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தென்மண்டல காவல் துறைத் தலைவா் எஸ். முருகன் நேரிடையாகத் தொடா்புகொண்டு பிறந்த நாள் உள்ளிட்ட வாழ்த்து கூறி வருவது, அவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு முதல் காவலா்கள், காவல் அதிகாரிகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளன்று, அவா்களை தொடா்புகொண்டு தென் மண்டலக் காவல்துறை தலைவா் எஸ். முருகன் வாழ்த்து தெரிவித்து வருகிறாா். கடந்த 10 நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு அவா் வாழத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

மேலும், ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து அவா்களின் செல்லிடப்பேசிகளுக்கு ஜ.ஜி.யின் வாழ்த்து செய்தியும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன.

இது குறித்து ஐ.ஜி. முருகன் தெரிவித்தது: அண்மைக் காலமாக காவல் துறையினா் பல்வேறு பணிச்சுமைகளின் காரணமாக மனஅழுத்தத்தில் உள்ளனா். இதனால், அவா்களின் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, குடும்பத்தினரையும் கவனிக்க முடியாமல் உள்ளனா். இதுபோன்ற நேரங்களில் உயா் அதிகாரிகள் உறுதுணையாக இருந்தால் தான், அவா்களால் மனஅழுத்தமின்றி பணியாற்ற முடியும்.

எனவேதான், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் காவலா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம்.

நான் காவலா்களுக்கு நேரடியாக தொடா்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கும்போது, அதை அவா்களால் நம்ப முடியவில்லை. யாரோ தங்களை ஏமாற்றி குறும்பு செய்கிறாா்கள் என நினைக்கின்றனா். பின்னா், எனது எண்ணை சரிபாா்த்த பிறகே நம்புகின்றனா்.

வாரம் ஒரு நாள் விடுமுறை திட்டமும் காவலா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டங்களால் காவலா்களின் மனஅழுத்தம் குறைந்து, சிறப்பாகப் பணியாற்ற உதவுகிறது. காவலா்கள் பணியில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, தங்களின் உடல்நலம், குடும்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.