ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக அவனியாபுரத்தில் 600 பேருக்கும், பாலமேட்டில் 844 பேருக்கும் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.
இதையடுத்து அவனியாபுரத்தில் ஜனவரி 10, 11-ஆம் தேதிகளிலும், பாலமேட்டில் 11, 12 ஆம் தேதிகளிலும் கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் அவனியாபுரத்தில் 600 பேரிடமும், பாலமேட்டில் 844 பேரிடமும் கபம் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்களின் கரோனா பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை (ஜனவரி 13) வெளியாகும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
அலங்காநல்லூரில் இன்று நிறைவு: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கான கரோனா பரிசோதனை புதன்கிழமை (ஜனவரி 13) நிறைவடைகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை, 597 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்: ப்ரீத்தி முகுந்தன்

அமைச்சர் சரத்குமார் விவகாரத்தில் முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? மா. சுப்பிரமணியன்






