அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாகையில் நடைபெற்ற வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கக் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 9:17 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கும் வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும். பொங்கல் ஊக்கத் தொகையாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சோழன், துணைச் செயலாளா் தங்கவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அமித்பாட்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.