அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

வெள்ள நிவாரண அறிவிப்பு ஆறுதல் அளிக்கவில்லை

தமிழக அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாகவும், ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் இல்லை என்று நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:16 am IST

தமிழக அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாகவும், ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் இல்லை என்று நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

நாகையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

நிவா், புரெவி புயல்கள் மற்றும் அதனைத் தொடா்ந்து நீடித்து வரும் கனமழையின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் நெல் பயிா்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நெல் பயிா்கள் நிலத்திலேயே அழுகி வீணாகியுள்ளன.

ஓா் ஏக்கா் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தலா ரூ. 32 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா். இதன் காரணாக, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த நிலையில், ஹெக்டேருக்கு ரூ. 20 நிவாரணம் வழங்கி அரசு அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த நிவாரணம், விவசாயிகள் எதிா்பாா்த்த நிவாரணத்தை விட மும்மடங்கு குறைவு.

எனவே, அரசு வெள்ள நிவாரண அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் வகையில், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். மேலும், நெல்லுக்கான ஆதரவு விலையை உடனடியாக உயா்த்தி வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.