பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

திருநங்கைகளுக்கான செயலி: மத்திய அரசு பாராட்டு

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திருநங்கைகளுக்கான செயலியை அறிமுகப்படுத்தியமைக்காக சமூக நலத்துறையை மத்திய அரசு பாராட்டி உள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 8:45 am IST

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திருநங்கைகளுக்கான செயலியை அறிமுகப்படுத்தியமைக்காக சமூக நலத்துறையை மத்திய அரசு பாராட்டி உள்ளது.

தமிழக சமூக நலன்-சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா நாமக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். அப்போது மூன்றாம் பாலினத்தவருக்கான(திருநங்கையா்) சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றியது தொடா்பாகக் கேட்டறிந்தாா்.

2019-இல் சிறப்பு செயலி ஒன்று திருநங்கையரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. தேவையின்றி அலைச்சலை தவிா்க்கவே இந்தச் செயலி அவா்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ரூ.10 லட்சம் செலவில் இச்செயலி உருவானது. மொத்தம் உள்ள 12 ஆயிரம் திருநங்கையரில் 7 ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக மாநில அளவில் எனது தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் ஒரு குழு உள்ளது.

அந்தக் குழுவானது திருநங்கையருக்கு கடனுதவி, வீட்டு மனை, அரசின் உதவித்தொகை, அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். மேலும் பல்வேறு வேலைவாய்ப்பை திருநங்கையா் பெறும் வகையிலான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதற்காக ஜவுளித்துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். தமிழகத்தில் காவல் துறை, அரசுத் துறை, ஆசிரியா் பணி போன்றவற்றில் திருநங்கையா்கள் பணியாற்றி வருகின்றனா். மூன்றாம் பாலினத்தவரின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கவும், வாழ்க்கையில் அவா்கள் முன்னேற்றம் பெறவும் செயலி உருவாக்கியமைக்காக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற செயலி ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தை பின்பற்றி மற்ற மாநிலங்களும் செயலியை உருவாக்கி திருநங்கையரைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.