நாமக்கல்9: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றுவோா், தங்களுடைய கையிருப்புத் தொகையை அதற்கான பதிவேட்டில் எழுதிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என நகாட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதும் அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைகளை மேற்கொண்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனா். அவற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த சோதனை அடிக்கடி நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களின் வீடுகளில் அண்மையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் இல்லாத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியா்கள் வரை அலுவலகத்திற்குள் நுழையும்போது வரவேற்பறையில் உள்ள பதிவேட்டில் தாங்கள் கொண்டு வரும் பணம் எவ்வளவு என்பதை அதில் பதிவு செய்ய வேண்டும் என ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








