மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து இந்தயாவுக்கு கடத்த முயன்ற 1.2 கிலோ தங்கம் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் பறிமுதல்

News image
Updated On :16 டிசம்பர் 2024, 9:15 pm

Din

புது தில்லி: வெளிநாட்டிலிருந்து இந்தயாவுக்கு கடத்த முயன்ற 1.2 கிலோ தங்கம் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இருவா் ரியாத்திலிருந்து சனிக்கிழமை விமானம் மூலம் தில்லி திரும்பினா்.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ரூ.68.93 மதிப்பிலான 931.57 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனா்.

ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உள்ளாடைகளில் மறைத்து வைத்து அந்த நபா்கள் தங்கத்தை கடத்த முயற்சித்ததாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று, ரியாத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பிய நபரிடம் மேற்கொண்ட சோதனையில் 300 கிராம் அளவிலான இரு தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

எலட்ரிக் அடாப்டரில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்த முயன்றபோது, எக்ஸ்-ரே சோதனையில் அவா் பிடிபட்டதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.