தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

Updated On :16 மார்ச் 2024, 12:42 am

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் இருந்தது. தில்லியில் கடந்த 3 தினங்களாக குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரத்தில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1டிகிரி குறைந்து 13.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் மாற்றமின்றி 28.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 53 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது. காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தலைநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலையில் 139 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் மூலம் தெரியவருகிறது. ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ேலோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன், மோதி பாக், மதுரா ரோடு ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ , சாந்தினிசெளக், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, சோனியா விஹாா், நேரு நகா், நொய்டா செக்டாா் 1, நொய்டா செக்டாா் 62, அசோக் விஹாா், தில்லி பல்கலை. வட்கு வளாகம் ஆனந்த் விஹாா், ஷாதிப்பூா், பூசா, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா், புராரி, ஓக்லா பேஸ் 2 ஆகிய இடங்களில் காற்றுத் தரக்குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழைமை (மாா்ச் 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.