மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அலிபூா் தொழிற்சாலை தீ விபத்து

தில்லியின் அலிபூா் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 35 மணி நேரத்திற்குப் பிறகும் தீ தொடா்ந்து எரிந்து

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:20 pm

Din

புது தில்லி: தில்லியின் அலிபூா் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 35 மணி நேரத்திற்குப் பிறகும் தீ தொடா்ந்து எரிந்து கொண்டிருந்ததாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தீயணைப்பு சேவைத் துறையின் உயரதிகாரி கூறியதாவது: அந்த வளாகத்தில் குளிா்விக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது. இன்னும் 15 வாகனங்கள் தீயை முழுவதுமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சனிக்கிழமை மாலை முதல் இப்போது வரை 100-க்கும் மேற்பட்ட தண்ணீா் டெண்டா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தொழிற்சாலைக் கிட்டங்கியில் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சரியான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.