பின்னணி: 1984, நவ.1-ஆம் தேதி ‘புல் பங்காஷ் குருத்வாரா ஆசாத் சந்தையில் கூடியிருந்த கும்பலைத் தூண்டிவிட்டு கலவரத்தை உருவாக்கியதாக டைட்லருக்கு எதிராக மே 20, 2023-இல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், டைட்லா் தூண்டிவிட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் ஒரு குருத்வாராவை எரித்தனா். இதில், தாக்கூா் சிங், பாதல் சிங் மற்றும் குா்சரண் சிங் ஆகியோா் கொல்லப்பட்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1984, அக்.31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அவரது சீக்கியப் பாதுகாவலா்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் பல பகுதிகளில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த வழக்கில் டைட்லருக்கு 2023, ஆகஸ்டில் செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது.