மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியை குண்டா்களின் தலைநகராக மாற்றியது பாஜக: முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சாடல்

தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவைரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா

News image
முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா
Updated On :30 செப்டம்பர் 2024, 8:31 pm

Din

புது தில்லி: தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவைரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா திங்கள்கிழமை சாடியுள்ளாா்.

இது தொடா்பாக மனீஷ் சிசோடியா ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது. தினந்தோறும் சில தொழிலதிபா்களின் இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், கப்பம் கோரும் சம்பவங்களும் நடந்து வருவதைப் பாா்த்தால், இந்தக் கும்பல்களுக்கு பாஜகவின் ஆசீா்வாதம் உள்ளது என்பது

தெளிவாகிறது. தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை நிறுத்தாமல், தில்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்தினால், அது தில்லி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்

மனீஷ் சிசோடியா.

பெட்டி..

தமிழக துணை முதல்வா் உதயநிதிக்கு கேஜரிவால் வாழ்த்து

தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய

ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு சேவை செய்து, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.