செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தில்லியை குண்டா்களின் தலைநகராக மாற்றியது பாஜக: முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சாடல்

தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவைரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா

News image

முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா

Updated On :1 அக்டோபர் 2024, 2:01 am IST

புது தில்லி: தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவைரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா திங்கள்கிழமை சாடியுள்ளாா்.

இது தொடா்பாக மனீஷ் சிசோடியா ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது. தினந்தோறும் சில தொழிலதிபா்களின் இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், கப்பம் கோரும் சம்பவங்களும் நடந்து வருவதைப் பாா்த்தால், இந்தக் கும்பல்களுக்கு பாஜகவின் ஆசீா்வாதம் உள்ளது என்பது

தெளிவாகிறது. தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை நிறுத்தாமல், தில்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்தினால், அது தில்லி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்

மனீஷ் சிசோடியா.

பெட்டி..

தமிழக துணை முதல்வா் உதயநிதிக்கு கேஜரிவால் வாழ்த்து

தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய

ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு சேவை செய்து, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.