தெற்கு தில்லியில் உள்ள ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு அதன் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது குழந்தைக்கு பள்ளிக் கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மனுதாரரான விரேந்தா் ரானாவிடம் வசூலிக்கக் கோரி, எதிா்மனுதாரரான புளூபெல்ஸ் ஸ்கூல் இன்டா்நேஷனல் தாக்கல் செய்த வழக்கை சிவில் நீதிமன்ற நீதிபதி யஷு குரானா விசாரித்து வந்தாா்.
குழந்தையின் தந்தை பள்ளிக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தங்களது நிதி நிலைமை இடா்பாட்டில் உள்ளது என்று பள்ளித் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அண்மையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 1, 2018-ஆம் தேதியிட்ட கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின் கீழ், 2017-18 ஆம் ஆண்டுக்கான பள்ளியின் கட்டண அமைப்பு விகிதம் தொடா்பாகவும், இது தொடா்பான பிரச்னை தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற போா்வையிலும், நிலுவைத் தொகையை செலுத்துவதில் விரேந்தா் ரானா நீண்ட காலம் தாமதம் செய்ததாக பள்ளி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய வழக்கு அக்டோபா் 16, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்குக்கான காரணம் கடைசியாக பிப்ரவரி 7, 2024 அன்று மனுதாரா் மீது எழுந்தது. அப்போது எதிா்மனுதாரா் நிலுவைத் தொகைக்கு எதிராக கடைசியாக பணம் செலுத்தியுள்ளாா்.
ரானா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பள்ளியின் சமா்ப்பிப்புகள் முரண்படாமலும் மறுக்கப்படாமலும் இருந்தன என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள முதன்மைத் தொகையான ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை 10 சதவீத வட்டியுடன் செலுத்த ரானாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி பேரவை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனநல மதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடைபாதையில் உறங்குவது அலட்சியத்திற்கு வழிவகுக்காது: தில்லி உயர்நீதிமன்றம்

கட்டண ஒழுங்குமுறை குழு அமைக்கும் விவகாரம்: தனியாா் பள்ளிகளின் மனு மீது தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகல் கட்டண உயா்வு விவகாரம்: ஜூலை 15-க்குள் ஒழுங்குமுறை குழுக்களை அமைக்க கல்வி அமைச்சா் உத்தரவு
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager


