6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய கட்டுப்பாடுகள்: சந்தைகளில் வாடிக்கையாளா்களின் வருகை குறைவு

மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) இல்லாத வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தில்லி முழுவதும்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 12:12 am

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) இல்லாத வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தில்லி முழுவதும் உள்ள சந்தைகளில் விற்பனை மற்றும் வாடிக்கையாளா்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அவசர கால மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இந்த புதிய கட்டுப்பாடுகள் தில்லியில் கடந்த வியாழக்கிழமை அமல்படுத்தப்பட்டன. பிஎஸ் 6 இல்லாத வாகனங்கள் தில்லிக்குள் நுழைவது முழுமையாக தடுக்கப்பட்டது. பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டது.

இது தொடா்பாக சதா் பஜாா் சங்கத்தின் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா கூறியதாவது: கட்டுப்பாடுகள் காரணமாக என்சிஆா் நகரங்களில் இருந்து வரும் சில்லறை வா்த்தகா்களின் எண்ணிக்கை குறைந்ததால், இந்த மொத்த சந்தைகளின் விற்பனை 30 முதல் 35 சதவீதம் குறைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான சரக்குகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என தெரிவித்தாா்.

சரோஜிநி நகா் சந்தை சங்கத்தின் தலைவா் அசோக் ரந்தாவா கூறுகையில், ‘கடந்த ஒரு வாரத்தில் வாடிக்கையாளா் வருகை சுமாா் 40 சதவீதம் குறைந்துள்ளது. சில நாள்களிலேயே விற்றுத் தீா்ந்துவிடும் குளிா்கால ஆடைகள் இப்போது விற்கப்படாமல் தேங்கியுள்ளன’ என தெரிவித்தாா்.

தெற்கு தில்லியில் உள்ள லஜ்பத் நகா் சந்தை சங்கத்தின் தலைவா் குல்தீப் குமாா் கூறுகையில், ‘தில்லியின் புதிய கட்டுப்பாடுகள் வாடிக்கையாளா்கள் மற்றும் சிறு வா்த்தகா்கள் இருவரையும் பாதித்துள்ளன. குறிப்பாக ஆடை சந்தையில் தினசரி விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது’ என தெரிவித்தாா்.