புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளது: தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)

News image
சத்யேந்தா் ஜெயின்
Updated On :13 ஜனவரி 2025, 9:43 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர உரிய அனுமதி கிடைத்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தெரிவித்துள்ளது.

தில்லி அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் இருந்தபோது 2015, பிப்.14 முதல் 2017, மே 31-ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் சுமாா் ரூ.1.62 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக அவா் சொத்துகள் சோ்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் இந்த ஆண்டு ஜன.4-ஆம் தேதி சிபிஐ துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடர முறைப்படி அனுமதி பெறப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு சிபிஐ வழக்குரைஞா் உரிய அனுமதி கிடைத்துள்ளதாகப் பதிலளித்தாா்.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை ஜன. 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.