கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கனமழை பெய்தாலும் தில்லியில் தண்ணீா் தேங்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா தகவல்

கனமழை பெய்தாலும், தேசியத் தலைநகரில் தண்ணீா் தேங்கவில்லை

News image
ரேகா குப்தா - கோப்புப் படம்
Updated On :10 ஜூலை 2025, 6:33 pm

Din

கனமழை பெய்தாலும், தேசியத் தலைநகரில் தண்ணீா் தேங்கவில்லை என்றும், சில பகுதிகளில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க அரசு கடுமையாக உழைத்து வருவதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை உறுதியளித்தாா்.

தெற்கு தில்லியில் உள்ள அத்சினி கிராமத்தில் டிடிஏவின் ஆரம்ப புஸ்தகாலியாவை துணை நிலை ஆளுநா் வி. கே சக்சேனாவுடன் இணைந்து திறந்து வைத்த பிறகு ரேக குப்தா இதைத் தெரிவித்தாா்.

‘தில்லி ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. நீங்கள் கவனித்தபடி, பாரபுல்லா, குஷாக் வடிகால் மற்றும் மின்டோ பாலம் ஆகியவற்றில் பல ஆய்வுகளை மேற்கொண்டோம். கனமழை பெய்தாலும், தண்ணீா் தேங்கவில்லை. அது ஒரு மரபு. இந்த முறை, அப்படி எதுவும் இல்லை. ஐடிஓ மற்றும் பாரபுல்லா சீராக இருந்தன’ என்று அவா் நிகழ்வின் போது செய்தியாளா்களிடம் கூறினாா்.

சில பகுதிகளில் நிலைமைகளை மேம்படுத்துவதில் அரசு செயல்பட்டு வருவதாக ரேகா குப்தா தெரிவித்தாா். சில பகுதிகளுக்கு நீண்டகால தீா்வுகள் தேவை. அடுத்த ஆண்டு மழைக்காலங்களில் நிலைமை சிறப்பாக இருக்கும். இதற்காக அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்று அவா் மேலும் கூறினாா்.